உலக மூலதனத்திற்கு ஏகாதிபத்திய அதிகாரப் போட்டிக்கு மக்களை பலியாக்கும் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக முன்னிலை சோஷலிஸக் கட்சி இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
துறைமுக நகர ஆணைக்கு சட்டமூலத்திற்கு எதிராக பல மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதற்குச் சமமாகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.