மட்டக்களப்பு நகர மத்தியில் 2019 ம் ஆண்டு இறந்த உறவுகளுக்காக மட்டக்களப்பு மாநகர சபையால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று காலை 8.45 மணியளவில் மட்டக்களப்பு மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபியில் மாநகர முதல்வர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றப்பட்டு இறந்தவர்களுக்கு மலரஞ்சலியும் தூவப்பட்டது.
கடந்த காலங்களில் குறித்த நினைவுத் தூபிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்த சிலர் இன்று அதிகாலையில் நினைவுத் தூபியில் நினைவஞ்சலி செய்தமை குறிப்பிடத்தக்கது.