1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளையும், கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றியமைக்க அம்மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருகோணமலை - கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் 50 படுக்கைகளையும்,  நிலாவெளி ஆயுர்வேத வைத்தியசாலையின் 48 படுக்கைகளையும், மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் 60 படுக்கைகள், ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் 30 படுக்கைகள், அம்பாறை​ வெரங்கொட வைத்தியசாலையின் 30 படுக்கைகள், அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் 30 படுக்கைகள் உள்ளிட்ட 238 படுக்கைகள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி