இலங்கையின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அஜித் வத்துஹேவா, இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்கும் போது அவருக்கு 55 வயது. அஜித் வத்துஹேவா, 2014 ஆம் ஆண்டில் வனிக தலைவரானார், உள்ளூர் வர்த்தக சபையால் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஊவா மாகாண வர்த்தக சபையின் நிறுவனராகவும் பல ஆண்டுகளாக அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் கொழும்பு வர்த்தக சபையை நிறுவுவதற்கு முன்னோடியாக விளங்கிய திரு. வத்துஹேவா, சார்க் பிராந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் சிரேஸ்ட துணைத் தலைவராகவும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
வத்துஹேவா ஊவா மாகாணம் தொடர்பான பல வணிகங்களின் உரிமையாளராக இருந்துள்ளார், மேலும் 1996 ஆம் ஆண்டில் ஊவா மாகாணத்தின் சிறந்த தொழிலதிபருக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
வத்துஹேவாவின் இறுதி சடங்குகள் பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.