பொலிஸின் விழாவொன்றில் கலந்து கொண்டிருந்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக் கவசமில்லாமல் வீற்றிருக்கும் புகைப்படமொன்றை அமைச்சரின் சமூக வலைத்தளம் வெளியிட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாகக் கூறி முகக் கவசம் அணியாதவர்களை இந்நாட்களில் பொலிஸார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொலிசுக்குப் பொறுப்பான அமைச்சரே தனிமைப்படுத்தல் சட்டத்தை பகிரங்கமாக மீறியிருப்பது பேசுபொருளாக ஆகியுள்ளது.