பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயற்குழுவின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிகிச்சை பெறும் அளவுக்கு உடல்நிலை இல்லை என்தாக விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"சிகிச்சை பெற அவருக்கு எந்த நோயும் இல்லை. நான் நேற்று பசில் ராஜபக்ஷவைச் சந்தித்தபோது, அவர் நாட்டை விட்டு வெளியேறியபோது அவருக்கு எந்த நோயும் இல்லை. ” நேற்று (13) ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு விளையாட்டு அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதியின் ஊழல் நடவடிக்கைக்கு முதன்மைப் பொறுப்பு வழங்கப்பட்ட சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நோய்க்கு சிகிச்சை பெற 12 ஆம் திகதி திடீரென வெளிநாடு சென்றாரா என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனிப்பட்ட காரணங்களுக்காக பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார்
மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மூன்று வாரங்களுக்குள் இலங்கைக்கு திரும்புவார் என்று கூறினார்.
இருப்பினும், பசில் ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றுவிட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் முதல் முறையாக ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, பசில் ராஜபக்ஷ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.