முன்னாள் மேலதி கணக்காய்வாளர் நாயகம் ஏ.எச்.எம். லலித் அம்பேவல திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.கண்டியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (13) காலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார்.
கணக்காய்வாளர்; என்ற வகையில் கணக்காய்வுத் தொழிலில் சேர்ந்த அவர் மத்திய மாகாண கல்வி அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 2002 வருடம் எசிட் தாக்குதலுக்கு உள்ளானார். மேற்படி அமைச்சில் நடந்த பல ஊழல் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமையினாலேயே எசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் முகமும் கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பல வருட சிகிச்சையின் பின்பு மீண்டும் பணியில் சேர்ந்த அவர் ஓய்வு பெறும் போது கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தில் மேலதிக கணக்காய்வாளராக பணியாற்றி வந்தார்.