நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலியில் இரண்டு பேரும், வாரியப்பொல, வறக்காபொல மற்றும் பியகம ஆகிய இடங்களில் தலா ஒவ்வொருவரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அவர்களில் நான்கு பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதுடன், வறக்காப்பொலயில் மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்கிழக்கு அராபிக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.