நண்பர்கள் குழுவுடன் மாத்தளையில் உள்ள சுற்றுலா பங்களாவில் வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்ற அமைச்சர் ஒருவரின் மகள் அட்டைக்கடி காரணமாக தம்புல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது தம்புள்ள மருத்துவமனையின் ICU (Intensive care unit ) இல் சிகிச்சை பெற்று வருகிறார்.
அட்டைகள் இரத்தத்தை உருஞ்சியதால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அமைச்சரின் மகள், அமைச்சரின் உயரடுக்கு மெய்க்காப்பாளர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர் குருநாகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று கூறப்படுகின்றது.
அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நேரத்தில் அமைச்சரின் மகள் உள்ளிட்ட குழு சுற்றுலாவிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.