கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் மேற்கொள்ள அனுமதி கேட்டு முன்னணி சட்டத்தரணிகள் நீதிமன்றில் தடைக்கெதிராக வாதாடிய நிலையில் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிப்பதை தடுப்பதற்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவு கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
குறித்த வழக்கு இன்றையதினம் வாதாட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் முடிவில் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொரோனா விதிமுறைகளைக்கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஷ் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் , சிரெஸ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமாகிய அன்ரன் புனிதநாயகம், சின்னராசா தனஞ்சயன் ஆகியோர் தடைக்கெதிராக ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.