போகம்பரை சிறைச்சாலையில் 104 தடுப்புக்காவல் கைதிகளுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
211 தடுப்புக் காவல் கைதிகளில் 104 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி சிறைச்சாலையில் 536 தடுப்புக் கைதிகள் இருப்பதுடன், அவர்களுக்கு அவசர பி.சி.ஆர். பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட தடுப்புக் காவல் கைதிகள் யாழ்ப்பாண சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.