இன்னும் இரண்டு வாரங்களுக்கு நாட்டை மூடுமாறு சில மருத்துவ சங்கங்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரித்துள்ளன. இதுபற்றி கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயற்குழுவிடம் ஏன் விவாதிக்கவில்லை என்பது புதிராக உள்ளது என்று கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல் மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு நாட்டை மூடுவதற்கு அழைப்பு விடுத்த மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஏதேனும் கூறப்பட்டால், அதைப் பற்றி விரிவாக விவாதித்து முடிவெடுப்பதற்கான வாய்ப்பாக இது இருக்கும் என்று ஷவேந்திர சில்வா கூறினார்.
கலந்துரையாடலின் முடிவில், புறக்கணிக்கப்பட்ட வேறு ஏதேனும் விடயங்கள் இருக்கிறதா என்று மருத்துவர்களிடம் கேட்பேன் என்று இராணுவத் தளபதி கூறினார். இதுபோன்ற விஷயத்தில் தான் ஒருபோதும் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
முந்தைய கலந்துரையாடல்களின் போது, மருத்துவ நிபுணர்களின் வேண்டுகோளின் பேரில் நாடு முழுவதும் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார், மேலும் அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டன என்றும் கூறினார்.
மருத்துவ நிபுணர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க அவர் தயாராக இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காரணம் என்ன?
இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, இதற்கு பொறுப்பான அரசாங்க அமைச்சர், மற்றும் பல அமைச்சர்கள்,அரசாங்க அதிகாரிகள் ஜனாதிபதி முன் பேச தயங்குகிறார்கள் என்று கூறினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட அமைச்சரவையில் ஒரு முரண்பாடான விடயத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்கும்போது, ஜனாதிபதி அதை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்று அவர் மேலும் கூறினார்.