எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் அவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல்நலக்குறைவு என்ற சந்தேகத்தின் பேரில் இருவரும் நேற்று (22) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பி.ஆர்.சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.இன்று காலை கிடைக்கப்பெற்ற மருத்துவ அறிக்கையின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. இது பொதுமக்களுக்கு வழங்கப்படும் வரை தடுப்பூசி போட மாட்டேன் என்று அவர் பலமுறை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் மனைவி ஜலனி பிரேமதாசவுக்கு சொந்தமான (Jaal Salon) அழகு நிலையத்தில் வரவேற்பாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.