கடந்த 7 நாட்களில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20000க்கும் மேல் நாட்டின் சகல மாவட்டங்களிலிருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 10000 பேர் கொழும்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.கொவிட் செயலணியின் உத்தியோக புள்ளிவிவரங்களின்படி மே மாதம் 17ம் திகதி காலை 7.00 மணியிலிருந்து 24ம் திகதி காலை 6.00 மணிவரை கண்டறிய்ப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 21455.
இந்த தொற்றாளர்களில் 3972 பேர் கம்பஹா மாவட்டத்திலிருந்தும், 3455 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்தும், 2347 பேர் களுத்துறை மாவட்டத்திலிருந்தும், 1533 பேர் காலி மாவட்டத்திலிருந்தும், 1273 பேர் குருநாகல் மாவட்டத்திலிருந்தும் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர்கள் 123 பேரும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து 100க்கும் குறைவானவர்களே கண்டறியப்பட்டுள்ளனர்.