இன்றிரவிலிருந்து தமது கடமைகளிலிருந்த விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.தற்போது நாட்டில் நடைபெறும் கொவிட் கட்டுப்படுத்தல் தடுப்பூசித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார கூறுகிறார்.
ஊடகத்திடம் கருத்து தெரிவித்த அவர், தடுப்பூசித் திட்டம் ஆரம்பத்தில் சரியாக செயற்பட்டதோடு, தற்போது முன்னுரிமைப் பட்டியலை மீறி செயற்படுவதாகக் கூறினார்.