கொவிட் தொற்றிற்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள தாதியர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காததன் காரணமாக நாளை (31) காலையிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறுகிறது.
அதன் பிரதான செயலாளர் எச்.எம்..எஸ்.பி. மெதிவத்த இது சம்பந்தமாக கூறுகையில், தமது பிரச்சினைகள் சம்பந்தமாக அதிகாரிகளிடம் விளக்கமளிக்க நடவடிக்கை எடுத்த போதிலும் அதற்கு சரியான தீர்வு கிடைக்காததன் காரணமாக இவ்வாறு முடிவு செய்ததாகக் கூறினார்.
இதன்படி, நாளை காலையிலிருந்து மறுநாள் (01) காலை வரை சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாக சங்கத்தின் பிரதான செயலாளர் மேலும் கூறினார்.
இதற்கிடையே, தமது கோரிக்கைகளுக்கு சரியான பதில் வழங்காமை காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்களின் சங்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்துள்ளது.
நேற்று மாலை சுகாதார அமைச்சில் நடைபெற்ற பேச்சுக்களின் போது தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக அதிகாரிகள் வாக்குறுதியளித்தமையால் தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம கூறியுள்ளார்.