எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பரவலையடுத்து கடலுணவுகளை உட்கொள்ள முடியும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது பொறுப்பற்ற தன்மையை வெளிக்கொணர்வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதனை அடுத்து கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அது தொடர்பில் சுமந்திரனிடம் ஊடகங்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.