சீனாவின் பிரசன்னத்தால் சினமடைந்த இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை நீக்கி தனது மொழியான இந்தியை புகுத்தியுள்ளது.
இலங்கையின் தென்பகுதியை ஆக்கிரமித்துவரும் சீனா அதன் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல் பலகைகளில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழை நீக்கி சீன மொழியை புகுத்தி வருகின்றது.
இந்த நிலையில் இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து சிங்களத்தை நீக்கியுள்ளது.
இது தற்செயலாக மேற்கொள்ளப்பட்டதா அல்லது சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை காப்பாற்ற இந்தியா முயன்று வருகின்றதா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.