கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக,
திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல
நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியன் பந்து விக்ரம
இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் சாலிய விக்ரமசூரிய
ஓரல் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான துஷான் கொடிதுவக்கு
முர்கன்டைல்ஸ் இன்வெஸ்ட்மென்ட என்ட் பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ் ஜெராட் ஒன்டச்சி
மேக்லரன்ஸ் குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரொஹான் த சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.