பொலிஸ் தலைமையகத்தை அத்திடிய பிரதேசத்திற்கு கொண்டு செல்ல அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.தற்போது பொலிஸ் தலைமையகம் அமைந்துள்ள கொழும்பு சைத்ய பாதையில் உள்ள கட்டிடம் 100 வருடங்களுக்கு மேல் பழைமையானதெனவும், அங்கு இடவசதிகள் போதுமானதாக இல்லையெனவும் அமைச்சரவை பத்திரமொன்றை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்திருந்தார்.
எப்படியிருந்தாலும், கொழும்பு நகரில் அமைந்துள்ள மதிப்பு வாய்ந்த காணிகளை துறைமுக நகரோடு இணைக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா என்ற சந்தேகத்தை சமீபகாலமாக ஊடகங்கள் எழுப்பி வருகின்றன.
இந்த பட்டியலில் பொலிஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இந்த பட்டியலில் இருந்த மக்கள் வங்கி தலைமையகத்தை வேறொரு இடத்தில் கட்டுவதற்கு சமீபத்தில் அடிக்கல் நடப்பட்டது.