மொரட்டுவ பிரதேசத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மொரட்டுவ நகர சபைத் தலைவர் சமன் லால் பர்னாந்துவின் பிணை கோரிக்கை மொரட்டுவ மேலதிக நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தில் தடுப்பூசி வழங்குவதில் ஈடுபட்டிருந்த சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு செய்தமை தொடர்ப்பில் கடந்தவாரம் இவர் கைது செய்யப்பட்டு ஜூன் மாதம் 11ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.