மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் காரணமாக மீனவர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தலைமை வழங்க தான் தயாரக இருப்பதாக பேராயர் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.
நேற்று (2) நடைபெற்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் கப்பலில் எண்ணெய் கடலில் கலந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுமெனவும் கூறினார்.
இந்த கப்பல் தீ பிடித்ததன் மூலம் மீனவர் சமூகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அவரது அலுவலர்கள் இது குறித்து சரியான முறையில் பதிலளிக்கவில்லையெனவும் போராயர் கூறியுள்ளார்.
அதுமாத்திரமல்ல, நாட்டை பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்தவர்கள் நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.