1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தற்போதைய நெருக்கடியால் ஜனநாயகத்தை மதிக்கும் குடிமக்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷர்களும், குறிப்பாக ஜனாதிபதியும் பெரும் ஆபத்தை எதிர்கொள்கிறார் என முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

"இன்று நாம் ஒரு தீவிரமான சமூக நெருக்கடிக்குச் செல்கிறோம், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தைப் பாதுகாக்க நாம் பிளவுபட்டு ஒன்றுபடக்கூடாது, இல்லையெனில் இந்த இடைவெளியை நிரப்ப எதிர்பாராத சக்திகள் எழக்கூடும்" என்று அவர் கூறினார்.

நேற்று இரவு (02) ஒளிபரப்பான ஒன்லைன் விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

'கடன் நெருக்கடி மற்றும் நாளைய தீர்வுகள்' என்ற கலந்துரையாடலில் சம்பிக ரனவக்க, சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் சானக்யன் ராசமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை  ZOOM தொழில் நுற்பம் ஊடாக மஹில் பண்டாரா உள்ளிட்ட பல இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

தொழில்முறை பிச்சைக்காரர்களுக்குள் ...

"1948 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை நாங்கள் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இருந்தோம், ஆனால் இன்று இது பணத்தை பரிமாறிக்கொள்ளும் உலகின் ஏழ்மையான நாடாக மாறியுள்ளது" என்று கூறினார்.

இன்றும் கூட இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களாதேஷை விட மூன்று மடங்கு அதிகம் என்று சுட்டிக்காட்டிய அவர் ஆனால் இன்று நாம் பங்களாதேஷில் இருந்து கடன் பெறக்கூடிய அளவுக்கு திவாலாகிவிட்டோம்.

இலங்கை ஒரு தொழில்முறை பிச்சைக்கார நாடாக மாறி வருவதாகவும், இந்த நாட்டில் ஒரு கப்பல் தீப்பிடித்தால் அவ்வப்போது இதுபோன்ற காரியங்கள் நடப்பது நல்லதொன்று நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் நினைக்கும் அலவுக்கு நாடு திவால்நிலையில் இருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி