கமத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.பி. ரோஹன புஷ்பகுமார அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இரசாயண பசளை பயன்படுத்துவதை குறைத்து கரிமப் பசளையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானமெடுத்த கையோடு எழுந்த பசளை நெருக்கடி அவரது ராஜினாமாவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
3 மாதங்களுக்குள் கமத்தொழில் செயலாளர் ராஜினாமா செய்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
தற்போது எழுந்துள்ள பசளை நெருக்கடியும், கமத்தொழில் அமைச்சின் மீதான அரசியல் தலையீடும் இதற்கு காரணமாகுமெனவும் கூறப்படுகிறது.