பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை ஆபிரிக்க நாடான நைஜீரியா தடை செய்துள்ளது.ட்விட்டர் நிறுவனம் தங்கள் நாட்டு விதிகளை மீறியதாக அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது புஹாரி குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது அந்த வலைதளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி புஹாரியின் ட்விட்டர் பதிவு ஒன்றை விதியை மீறியைதாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் அகற்றியதை அடுத்தே இந்தப் பிரச்சினை தோன்றியுள்ளது.
ஜனாதிபதியின் ட்விட்டர் பதிவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னராக சிவில் யுத்தம் பற்றி குறித்துக் கூறப்பட்டிருப்பதோடு, நாட்டின் தென் கிழக்கில் இயங்கும் பிரிவினைவாதிகளை எச்சரித்துள்ளார். இந்த ட்விட் அகற்றப்பட்டது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் நைஜீரிய அரசு, இந்த சமூக ஊடகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதற்கு இது மாத்திரம் காரணமில்லை என்று தெரிவித்துள்ளார்.