மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.தீ விபத்து ஏற்பட்டபோது 37 பேர் தொழிற்சாலையில் பணியில் இருந்தனர்.. இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
தொழிற்சாலையின் இருபக்கச் சுவரையும் உடைத்து அதிகாரிகள் உள்ளே நுழைந்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரதமர் நரேந்திர மோடி 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.