கொரியாவில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக நடத்தப்படும் பரீட்சையில் சித்தியடைந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், தொழில் வாய்ப்பிற்காக அந்நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இளைஞர், யுவதிகள் தெரிவிக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வருடம் வெளியிடப்பட்டதுடன் 5,000 பேர் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர்.