ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் வறுமை ஒழிப்பது தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் உருவாகியுள்ளன.
பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர், இந்த பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமான சில பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.