கனடாவில் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் மூடப்பட்ட பழங்குடியின பள்ளிக்கூடத்தில் இருந்து அண்மையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், இனி அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து வகை ஆவணங்களிலும் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.