தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.நாளை புதன்கிழமை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது.
புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசுவதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்தது.இந்நிலையில், குறித்த சந்திப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.