இணையத்தின் ஊடாக மதுபான விற்பனைக்கு மதுவரித் திணைக்களம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதியின் தலைமையிலான கொவிட் -19 தடுப்புச் செயலணி நிராகரித்துள்ளது.
சமீபத்தில் online முறையில் மதுபானம் விற்பதற்கு நிதி அமைச்சு கொள்கை ரீதியில் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்ள்ளதாக் கொவிட்-19 தடுப்புச் செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் online மூலம் மதுபானம் வழங்குவதற்கு தமது எதிர்ப்பை காட்டியுள்ளது.