இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் பி.1.617.2 அல்லது ‘டெல்டா கொவிட் வைரஸ்’ தொற்றிய 5 பேர் கொழும்பு தெமட்டகொடையில் கண்டறியப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர், விரிவுரையாளர் சந்திமா ஜீவந்தர ஊடகங்களிடம் கூறுகையில், ‘இந்த டெல்டா கொவிட் வைரஸ் மாதிரி இந்நாட்டில் வேகமாக பரவி வரும் பி.117 அல்பா பிரித்தானிய வைரஸ் மாதிரிக்கு ஒப்பீடாக 50% அதிக பாதிப்பைக் கொண்டுள்ளதாகவும், நோய் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.
தவிரவும் பிரித்தானியாவில் பரவியுள்ள பி 117 அல்பா வைரஸ் தொற்றியவர்கள் மேலும் 5 பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறும் அவர், இதன் ஆபத்தை விளக்கும் போது கொரோனா தடுப்பூசியால் இந்திய மாதிரியை கட்டுப்படுத்த முடியாதெனவும் கூறியுள்ளார்.