நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பருவமழைக் காரணமாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஊருக்குள் புகுந்த ஆற்றுநீர் பலரை அடித்துச் சென்றது.அடித்துச் சென்றவர்களில் 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 22 பேரை தேடும் பணிகளில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.