தெஹிவளை, நதிமால களஞ்சியமொன்றில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான மருந்துகள் சந்தைக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்தனவா என்பது குறித்து விசாரணை செய்த பின்னர் அவற்றை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை குறிப்பிடுகிறது.
சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகள் தனியாக பொதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கும் நிலையமொன்றை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இவற்றை விநியோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் அதிகார சபை கூறியுள்ளது.