அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஸ இன்று (24) காலை நாடு திரும்பியுள்ளார்.
துபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே – 650 விமானத்தில் அவர் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த மே மாதம் 12 ஆம் திகதி பசில் ராஜபக்ஸ நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.
நாடு திரும்பிய பசில் ராஜபக்ஸவை வரவேற்பதற்காக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.