பொது மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அடையாளம் காணப்படாத 20 பேரைக் கொண்ட கோஷ்டியினர் திடீரென வீட்டிற்குள் நுழைந்த தனது தந்தையை கடத்திச் சென்றதாக அசேல சம்பத்தின் மகள் வீடியோவொன்றை இணையத்தில் உலவ விட்டுள்ளார்.
குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் அசேல சம்பத்தை கைது செய்திருப்பதாக சில மணித்தியாலங்களுக்குப் பின்னர் தெரியவந்துள்ளது.
அசேலவை கைது செய்ய வந்தவர்கள் வீட்டிலிருந்த டெப் கணினிகள் சிலவற்றையும் எடுத்துச் சென்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. பொலிஸார் திடீரென வீட்டிக்குள் நுழைந்த தருணத்தில் அவரது பிள்ளைகள் நிகழ்நிலை (Online) கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அதற்காக பிள்ளைகள் பயன்படுத்திய டெப் கணினிகளையும் அவர்கள் பலவந்தமாக பறித்துச் சென்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.