Xpress Pearl கப்பல் விபத்திற்குள்ளாதனால் வெளிநாட்டு பணியாளர் இலங்கைக்கு அனுப்பிய ரூ.48 மில்லியம் மதிப்புள்ள பொருட்களும் அழிந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
வெளிநாடுகளில் மிகவும் கஷ்டமான நிபந்தனைகளின் கீழ் உழைப்பைச் சிந்திப் பெற்ற பணத்தினால் தமது குடும்பத்தவர்களுக்கும், தமது எதிர்கால தேவைகளுக்காகவும் விலைக்கு வாங்கிய அனுப்பிய பொருட்கள் அடங்கிய 4 கொள்கலன்களும் கப்பலில் அழிந்துள்ளன.
இதனால் ஏற்பட்ட பாதிப்பு சம்பந்தமாக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு Xpress Pearl கப்பல் கம்பனியிடம் இழப்பீடு கோர வேண்டுமென கொழும்பு வியாபாரிகள் சங்கம் அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளது.