பொறியியல் சேவைகள் ஊழியர் சங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.ஊழியர்கள் வேட்டையாடப்படுவதை நிறுத்துதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளை கவனத்திலெடுக்குமாறு வலியுறுத்தி பொறியியல் கூட்டுத்தாபன கட்டிடத்தின் மேல் ஏறி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறியக்கிடைக்கின்றது.
9 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டமை மற்றும் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபன நிர்வாகம் மேற்கொள்ளும் தொழிலாளர் அடக்குமுறைக்கு எதிராக இரண்டு ஊழியர்கள் நிறுவனத்தின் கூரை மீதேறி நேற்றிலிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது.