தொழிற்சங்கத் தலைவர்களை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்கங்கள்.
துமிந்த நாகமுவ உட்பட தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து கொள்ளுப்பிட்டிய சி.எம். கேட்போர் கூடத்தில் இன்று (07) பிற்பகல் ஊடக சந்திப்பொன்றை நடத்தின.
இதன்போது, இலங்கை குடியரசு சுகாதார ஊழியர் சங்கம், பொறியியல் சேவைகள் தொழில் நிபுணர்கள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ஒன்றிணைந்த பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர் சங்கம், பொறியியல் கூட்டுத்தாபன நிர்வாக சேவைகள் சங்கம், இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் பொது ஊழியர் சங்கம், விவசாய மற்றும் காணி மறுசீரமைப்பு இயக்கம், ஒன்றிணைந்த ஆசிரியர் சேவைகள் சங்கம், ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம், சுகாதார ஊழியர் மத்தியநிலையம், தொழிலாளர் போராட்ட மத்தியநிலையம், 43ம் படையணியின் ஊழியர் சங்கம் உட்பட தொழிற்சங்கங்களும் பல அமைப்புகளும் கலந்து கொண்டன.