“இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கம்” ஏற்பாபடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிருகத்தனமாக தாக்கிய பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றுமல்ல ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பாரத்துக் கொண்டிருந்தவர்களையும் பொலிஸார் விரட்டி விரட்டி தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடுவதற்கு எதிராகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்குள் திடீரென நுழைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்துள்ளனர்.