கொவிட் 19- சீன நிறுவனம் இலங்கையில் சினோவக் தடுப்பூசியை இறுதி தயாரிப்பாக அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது என்ற செய்தி தொடர்பாக அகில இலங்கை நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளரான அசேல சம்பத் செய்த முறைப்பாட்டிற்கு அமைய அந்தச் செய்தியை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த Voice TUBE ஆசிரியர் துஷாரா செவ்வந்தி விதாரண 09.07.2021 (இன்று) சிஐடி குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு (சிஐடி) மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜங்க அமைச்சர் சன்ன ஜயசுமன முறைப்பாடு செய்துள்ளார்.
சீன நிறுவனத்தின் விதிமுறைகள்!
கண்டியில் உள்ள குண்டசாலை பகுதியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலையின் ஆரம்ப தொழில்நுட்ப பணிகள் சில வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சீனர்களுக்கு வழங்கப்படும் நிபந்தனைகள்மற்றும் அதிக விலைகள் காரணமாக உற்பத்தியை அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தடுப்பூசியின் குறைந்த தரம் மற்றும் தடுப்பூசியை தயாரிக்கும் சீன நிறுவனம் இலங்கைக்கு விற்க வேண்டிய சினோவக் தடுப்பூசியின் விலை தெரியவந்தால் ஒப்பந்தம் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது.
இந்த விதிமுறைகள் சீனாவின் Sinovac Lifesciences Co.Ltd மற்றும் சீனாவில் பதிவுசெய்யப்பட்ட இலங்கையின் Kelun Lifesciences Pvt Ltd ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு தடுப்பூசியின் விலை பற்றி விளம்பரப்படுத்துவது அல்லது பகிரங்கமாக பேசுவது ஒப்பந்தம் முடிவதற்கு வழிவகுக்கும்.
ஜூன் 11 2021, 28
எவ்வாறாயினும், இந்த தடுப்பூசி மோசடி தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் குறித்து அரச மருந்துக் கலவை அதிகாரிகள் (எஸ்.பி.சி) ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சீனாவில் தயாரிக்கப்படும் சினோவக் தடுப்பூசி இறக்குமதி மற்றும் பொதியிடல், பல்லேகலயில் உள்ள Kelun Lifesciences Pvt Ltd தொழிற்சாலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சயனோஃபார்ம் தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதியை இறக்குமதி செய்ய 2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தனது வழக்கறிஞர் மூலம் 'Voice TUBE' ஆசிரியருக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.