ஜூலை மாதம் 7ம் திகதி பொறியியல் கூட்டத்தாபன ஊழியர்களின் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் போராட்ட நிலையத்தின ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி பொலிஸாரால் கடத்தப்பட்டனர்.
பின்னர் ஜூலை 8ம் திதி கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது 33 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர்களுக்கும் பிணை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களில் 16 பேர் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பட்டனர்.
இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கல்வி துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் கூடியளவு நடவடிக்கை முன்வந்துள்ளனர்.
மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை செயல்களுக்கு எதிராகவும் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்த வாரத்திற்குள் ஹபயாஸ்கோபுஸ் மனுக்கள், அடிப்படை மனித உரிமை மீறல் சம்பந்தமான மனுக்கள் மற்றும் அநீதியான தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதன் முதற் கட்டமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹபயாஸ்கோபுஸ் மனு இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், இலவசக் கல்வியை பாதுகாக்குமாறும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்மொன்றும் நடைபெற்றது.
ஜூலை மாதம் 7ம் திகதி பொறியியல் கூட்டத்தாபன ஊழியர்களின் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் போராட்ட நிலையத்தின ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி பொலிஸாரால் கடத்தப்பட்டனர்.
பின்னர் ஜூலை 8ம் திதி கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது 33 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர்களுக்கும் பிணை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களில் 16 பேர் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பட்டனர்.
இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கல்வி துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் கூடியளவு நடவடிக்கை முன்வந்துள்ளனர்.
மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை செயல்களுக்கு எதிராகவும் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்த வாரத்திற்குள் ஹபயாஸ்கோபுஸ் மனுக்கள், அடிப்படை மனித உரிமை மீறல் சம்பந்தமான மனுக்கள் மற்றும் அநீதியான தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதன் முதற் கட்டமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹபயாஸ்கோபுஸ் மனு இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், இலவசக் கல்வியை பாதுகாக்குமாறும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்மொன்றும் நடைபெற்றது.