கூட்டமைப்பிற்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
நாளை மறுநாள் (15) வியாழக்கிழமை, காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும்.
அமெரிக்க தூதுவரே இந்த சந்திப்பிற்கான அழைப்பை விடுத்திருந்த போதும், இரா.சம்பந்தன் நடமாட முடியாத நிலைமைக்குள்ளாகியுள்ளதால், அவரது வீட்டிலேயே சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு அமெரிக்க தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.