1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 21ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பின் பின்னரே அரசாங்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆறு யோசனைகள் ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவது, அரசாங்கத்துடன் இணைந்து ஒன்றாக பயணிப்பது, எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது உள்ளிட்ட சில முக்கிய யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி