லாஃப் கேஸ் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் லிட்ரோ கேஸிற்கு பற்றாக்குறை இருப்பதாகவும் எரிவாயு விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் எரிவாயுக்கான முழு தேவையையும் தனது நிறுவனத்தால் பூர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் திசார ஜெயசிங்க இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இன்று காலை கொழும்பிலும் அதன் சுற்றுப்புறத்திலும் லிட்ரோ எரிவாயு இருப்பு இல்லை என்றும், இன்று பிற்பகலுக்குள் எரிவாயு கிடைக்கும் என்று லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.
எரிவாயு விநியோகத்தில் 20% சந்தைப் பங்கைக் கொண்ட லாஃப் கேஸின் செய்தித் தொடர்பாளர், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்புகளால் எரிவாயு இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாகக் கூறினார். இருப்பினும், எரிவாயு வழங்கல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்தின் உதவியை நாடுவதாகவும் அவர் கூறினார்.