நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துப்பொருட்கள் தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுமார் 7 வகையான மருந்துப்பொருட்கள் பதிவு செய்யப்படாது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உணவு மற்றும் ஔடதங்கள் தொடர்பான தலைமை பரிசோதகர் அமித் பெரேரா குறிப்பிட்டார்.