ஒவ்வொரு மாவட்டத்திலும் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம நிலதாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தலைமையில் நடந்த கொரோனா ஒழிப்பு செயற்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,கொவிட் தடுப்பூசியின் முன்னேற்றத்தை கிராமசேவகர்கள் நான்கு பிரிவுகளின் கீழ் இதனை தெரிவிக்க வேண்டும்.
வயதுக்குட்பட்டவர்களின் கீழ் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு கிராம நிலதாரியும் இந்த தகவலை அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன் தெரிவிக்க வேண்டும்.
இருப்பினும், இந்த திட்டம் நடைமுறைக்கு மாறானது என்று கிராம நிலதாரிகள் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கிராமா நிலதாரிகள் ஒரு சில நாட்களில் இதுபோன்ற ஆபத்தான பணியைச் செய்ய நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.