வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து தேசிய பூங்காக்களும் இன்று (26) முதல் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படுகின்றன.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நிலைமை காரணமாக குறித்த தேசிய பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
எனினும் யால, உடவலவ, ஹோட்டன் சமவௌி மற்றும் மின்னேரியா தேசிய பூங்காக்கள் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மிரிஸ்ஸ கடலில் திமிங்கிலங்களை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று (26) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.