பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க , உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்படாமையால், தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.