கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் 13 ஏக்கர் நிலத்தை சீனாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.சீன நிறுவனமான சி.ஐ.சி.டி யால் பல்வேறு சேவை வழங்கல் சேவைகளுக்கான மையத்தை அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் கோரி துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேற்று (26) அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.
அதன்படி, இந்த நிலம் கொழும்பு தெற்கு துறைமுகத்திற்கு சொந்தமான பாட்டன்பெர்க் பகுதி மற்றும் புளூமெண்டல் பகுதியிலிருந்து வழங்கப்பட உள்ளன.
உத்தேச திட்டத்தின் அடிப்டையில் 35 வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 15% மட்டுமே உள்ளது.